1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (18:06 IST)

புதிய பாராளுமன்ற கட்டிடம் எப்போது திறப்பு? வெளியான தகவல்

புதிய பாராளுமன்றக் கட்டிடம் வரும்   நவம்பர் 26 ஆம் தேதி திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் உறுப்பினர்கள் உட்காருவதற்காக போதுமான இடவசதி இல்லை என்பதால் புதிய பாராளுமன்றக் கட்டியம் கட்டப்பட்டு வருகிறது.

இதில், எம்பிக்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு  நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வரும் இந்த கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் முடிக்க ஒப்பந்ததார்களுக்கு காலக்கெடு நிரணயிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் இந்தப் பணிகள் முடிவடைந்து,அரசியலைப்பு சட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதி முதல் புதிய பாராளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.
 
ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்  ஒப்பந்தத்தை  டாடா கைப்பற்றியுள்ளது  குறிப்பிடத்தக்கது.