அடிபணிந்த ராஜபக்சே: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகல்

சனி, 15 டிசம்பர் 2018 (11:21 IST)
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பையொட்டி இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகுகிறார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா நியமனம் செய்தார்
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த வழக்கில் ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்றது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் முடியவில்லை.  திடீரென பாராளுமன்றம் முடக்கப்பட்டதால் மீண்டும் பாராளுமன்றம் இயங்கும் வரை ராஜபக்சேவே பிரதமராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜபக்சே பதவி விலக தீர்ப்பளித்தது. அதன்படி ராஜபசே தனது ராஜினாமா கடிதத்தை சிறிசேனாவிற்கு இன்று அனுப்பியுள்ளார்.
 
நாளை மீண்டும் ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments