டுவிட்டரில் அறிமுகம் ஆகவுள்ள புதிய வசதி...

வியாழன், 11 ஜூன் 2020 (17:23 IST)
இன்று இணையதள உலகில் உள்ள சமூக வலைதளங்களில் அதிக மக்கள் டுவிட்டரை பயன்படுத்திவருகின்றனர். உலகில் நடைபெற்று வரும் முக்கிய கருத்துகளை குறித்து விவாசித்து வருகின்றனர். இதில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் அனைவராலும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டுவிட்டரில் 24 மணிநேரங்களில் தானாகவே மறையும்  புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக டுவிட்டர் தரப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி ,பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இவ்வசதி பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஃப்ளீட்ஸ் பீச்சர் என்று அழைக்கப்படும் இந்த வசதியை பயனாளர்கள் தேர்வு செய்தால் அடுத்த 24 மணிநேரத்திற்குப் பின் அது தானாகவே மறைவும். ரீடிவிட், லைக், பின்னூட்டம் என அனைத்தும் மறையும்., ஸ்னாப்சாட் செயலியின் ஸ்டோரீஸ் வசதியைப் பார்த்து இது வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வசதியை டுவிட்டர் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கபடுவதாகவும், இணையதளத்தில் டுவிட்டர் பயன்படுத்துபவர்களால்  இதைப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments