கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து: 3 பேர் படுகாயம்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:37 IST)
கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள ஐயோவா என்ற மாகாணத்தில் கூகுள் டேட்டா சென்டர் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த சென்டரில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கூகுள் டேட்டா சென்டரில் மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் மூன்று பேர்களும் கூகுள் டேட்டா சென்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் என்று கூறப்படுகிறது
 
இந்த தீ விபத்து காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் கூகுள் சியர்ஸ் சேவை தடை பெற்றுள்ளதாக பலர் குற்றம் சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

டேன்ஸ் ஆடக்கூடாதா?!.. திருமணத்தை நிறுத்திய மணமகளின் தந்தை...

விஜய்க்கு போன தலித் ஓட்டுகள்!.. புலம்பும் திருமாவளவன்!. நடப்பது என்ன?...

சென்னையில் உருவாகும் மாபெரும் கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா: முதற்கட்டப் பணிகள் தீவிரம்!

இனி டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.. விரைவில் வரவிருக்கும் உத்தரவு...

சென்னை மட்டுமல்ல மதுரை, கோவைக்கும் ஏசி பஸ்.. 2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments