1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (15:32 IST)

வெடி குண்டு மிரட்டல் : 263 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்

மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக யாரோ மிரட்டல்  விடுத்ததால் சாங்கி விமான நிலையத்தில் விமானம் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.
நேற்று இரவு 263 பயணிகளுடன் மும்பையிலிருந்து ஒரு விமானம்  சிங்கப்பூர் சென்றது. அப்போது விவ்விமானத்தை இயக்கிய விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்தது. 
 
இதனையடுத்து சங்கை விமானம்நிலையத்தில் இந்த விமானம் தரையிரக்கப்பட்டது. பின்னர் விமானத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்தது. 
 
ஆயினும் விமானத்தில் சந்தேகம் கொள்ளும்படி இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.