எபோலா நோய் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

திங்கள், 14 மே 2018 (11:23 IST)
எபோலா நோய் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்தது.
 
இந்நிலையில், இந்த நோய் மீண்டும் காங்கோ நாட்டில் பரவி வருகிறது. இதனால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எபோலா நோயால் தான் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எபோலா நோய் மீண்டும் பரவி வருவதால் அனைத்து நாடுகளையும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான அதிகாரபூர்வமான சிகிச்சை எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நானே வந்து பிரச்சாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் கூறினார்.. வைகோ பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நீக்கம்.. புதிய தலைவர் அறிவிப்பு...!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒன்று அதிகாரம் படைத்தது அல்ல: அமைச்சர் நிர்மல்குமார்

ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை.. இது எதுவுமே குடியுரிமை சான்றிதழ் இல்லை.. அப்ப எதுதான் குடியுரிமை சான்றிதழ்..

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. 9 ஆண்டு உறவு முறிந்தது.. அதிகாரபூர்வ அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments