Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: உக்ரைன் கைவரிசையா?

Written By Mahendran
Updated: வியாழன், 2 மார்ச் 2023 (11:13 IST)
ரஷ்யாவில் அடுத்தடுத்து 'டிரோன்'  தாக்குதல் நடைபெற்று வருவதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டு கடந்தும் தீவிரமாக இருநாட்டின் எல்லைகளில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் எல்லை பகுதியில் அடிக்கடி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு திடீரென ரஷ்யாவின் எல்லை பகுதியில் 3 இடங்களில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் கார் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ட்ரோன் நொறுங்கி விழுந்தது என்றும் இதில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைவிரல் ரேகை பதிவு.. இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்...

நீட் தேர்வு போராட்டத்தின்போது பதிவான அனைத்து வழக்குகளும் ரத்து: அமைச்சர் ராஜ்மோகன்

ராகுல் காந்தி தமிழ்நாடு மண்ணில் கால்பதித்த வேளையில் காவிரி தண்ணீர்.. மாணிக்கம் தாகூர் பெருமிதம்..

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஜெய்முகமது தீவிரவாதி.. போலீஸ் உடையணிந்து கலவரம் ஏற்படுத்தியது கண்டுபிடிப்பு..

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரால் நீட்போராட்டம் நடத்த முடிகிறது.. இங்கிருக்கும் திமுகவால் முடியாதது ஏன்? வேல்முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments