சுவையான காய்கறி பிரியாணி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிதளவு
தயிர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு - ஒன்றரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
தக்காளி - 3
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு அனைத்தும் - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்யை நெய் உற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
 
இதனுடன் நறுக்கிய தக்காளி, தயிர், உப்பு, காய்கறி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த காய்கறி பிரியாணி தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments