சத்தான முடக்கத்தான் கீரை அடை செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி  - ஒரு கப்
பச்சரிசி - அரை கப்
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயத்தூள் - சிறிது
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
 
மாவு சிறிது மசியும்போது முடக்கத்தான் கீரையை கழுவி, ஆய்ந்து நறுக்கி மாவுடன் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு, பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
 
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லை மிதமான தீயில் வைத்து மாவை அடையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments