தேங்காய்ப்பால் பிரியாணி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பிரியாணி அரிசி - 1 டம்ளர் பீன்ஸ்
கேரட் - 3
காலி பிளவர் - 2
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
உருளைக் கிழங்கு - 3
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20 
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய் - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 6 பல்லு
பெரிய தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக்  கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
பொடித்து வைத்துள்ள மசாலாக்கள் மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேகவைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான  தேங்காய்ப்பால் பிரியாணி தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments