சூப் தயாரிக்கலாம்
முதலில் தேவையான காய்கறிகளை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும், சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனை சூப்பில் சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்கும்போது கொத்துமல்லி தூவி பரிமாறவும்.