கசப்பு இல்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?

செவ்வாய், 21 நவம்பர் 2023 (09:38 IST)
பாகற்காயில் பல நோய்களையும் எதிர்க்கும் பண்பு உள்ளது. பாகற்காய் கசப்பாய் இருப்பதால் பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயை வைத்து சுவையான சாம்பார் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.


  • தேவையான பொருட்கள்: பாகற்காய், துவரம் பருப்பு, கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல், புளி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
  • முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.
  • கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துறுவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பாகற்காய் துண்டுகளை போட்டு சுருள வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • நல்ல கொதி வந்த பிறகு அரைத்த கலவை மற்றும் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து சிறிது கொதிக்க விட வேண்டும்.
  • பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சாம்பார் தயார்.
 

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments