ருசியான வேர்க்கடலை சட்னி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
காய்ந்த வேர்க்கடலை - 250 கிராம் 
காய்ந்த மிளகாய் - 4  
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பல்
 
தாளிப்பதற்கு:
 
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/4 ஸ்பூன் 
உழுந்தம் - பருப்பு
சீரகம் - சிறிதளவு 
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
 
காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும். 
 
ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும், கெட்டியான வேர்கடலை சட்னி தயார். இவை இட்லி, தோசை, சாதம், பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எல்லாம் காட்டு

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments