சுவையான மொறு மொறு மெது வடை செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
உளுந்து - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
வெங்காய்ம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி

செய்முறை:
 
உளுந்தை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு கழுவி சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு சேர்த்து நன்கு கலக்கவும். 
 
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விரல்களை நனைத்து மாவை சிறிது எடுத்து உருண்டையாக்கி, பிறகு தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.

எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் வடை மாவை எடுத்து அதில் போடுங்கள்.  பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.

எல்லாம் காட்டு

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

அடுத்த கட்டுரையில்
Show comments