Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...!

Updated: புதன், 9 ஜனவரி 2019 (15:13 IST)
 
காலையில் செய்த கூட்டு மீந்துவிட்டதா? சிறிது பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கூட்டைக் கொதிக்கவிட்டு இறக்கினால்,  மாலை டிபனுக்குக் குருமா ரெடி. புளிப்பு அதிகம் வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.
 
பருப்பு வகைகளை வேகவைக்கும்போது, சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது பூண்டு போட்டு வேக வைத்தால் பருப்பு சீக்கிரமே  வெந்துவிடும்.
 
சாம்பார் செய்ய அல்லது வேறு ஏதாவது சமையல் செய்ய துவரம் பருப்பு வேகவைக்கும்போது, ஒரு பிடி கொள்ளையும் போட்டு  வேகவைத்தால் உடம்புக்கு நல்லது.
 
மசாலா பொடிக்கு மிளகாயை வறுக்குபோது அதோடு ஒரு பிடி நிலக்கடலையைச் சேர்த்து கொள்ளுங்கள். நல்ல சுவையுடன் இருக்கும். கறிவகைகள் செய்யும்போது இந்தப் போடியை மேலாகத் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.
 
கூட்டு, பொரியல் குழம்பு வைக்கும்போது அவசியம் ஜீரகம் போட்டு தாளிக்கவும். குழம்பு வாசனையாக இருப்பதுடன் சாப்பாடு எளிதில் ஜீரணம்  ஆகிவிடும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments