முரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா?

திங்கள், 29 அக்டோபர் 2018 (06:59 IST)
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.

தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டாஸ்!.. சென்னை காவல் ஆணையர் அதிரடி..

நான் சொன்னது இதுதான்!.. என்ன மன்னிச்சிடுங்க!. மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்..

தமிழ்நாட்டின் கடன் அதிகரிக்க 4 முக்கிய காரணங்கள்!. வெள்ளை அறிக்கை சொல்வது இதுதான்!..

இலவச திட்டங்களால் 25 ஆயிரம் கோடி கூடுதல் செலவு!.. நிதியமைச்சர் தகவல்!...

தமிழ்நாட்டில் அதிகமாகும் முதியோர்களின் எண்ணிக்கை!.. நிதியமைச்சர் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments