Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா?

Updated: திங்கள், 29 அக்டோபர் 2018 (07:00 IST)
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.

தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments