காவிரி விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்!

வியாழன், 29 மார்ச் 2018 (18:52 IST)
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடக அரசும் கூறி வந்த நிலையில் தற்போது மத்திய அரசும் அதே கூறியுள்ளது.
 
நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால். மத்திய அரசு மீது சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எல்லோரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

தவெக பெண் நிர்வாகிகள் பற்றி ஆபாச பேச்சு!.. பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு!...

அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகளை நீக்கும் ஈபிஎஸ்.. மீண்டும் ஆலோசனை செய்யும் வேலுமணி, எஸ்பி சண்முகம்..!

இந்திய புவித்தட்டில் உட்புற சிதைவுகள்: இந்தியாவில் அடிக்கடி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பா?

தவெக எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, களத்தில் குதித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எல்லோரும் திருந்திட்டாங்க போல...

அடுத்த கட்டுரையில்
Show comments