துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு வந்த சம்மன்: அதிமுகவில் பரபரப்பு

வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:49 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன் ஓபிஎஸ் விரைவில் ஆஜராவார் எறு கூறப்பட்ட நிலையில் அவர் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அவர்களிடம் நடத்தும் விசாரணையுடன் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ளதாகவும், அதனையடுத்து விரைவில் தமிழக அரசுக்கு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

எல்லாம் காட்டு

பாமக உள்ள வரக்கூடாது!. ராகுல் வைத்த செக்!.. கடுப்பில் அன்புமணி ராமதாஸ்...

வாட்ஸ் அப் வழங்கிய புதிய வசதி.. இது ஆபத்தானது.. எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய அரசு...

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுங்கள்.. உங்கள் பணம் விரைவில் கிடைக்கும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

15 தவெக எம்.எல்.ஏக்களை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வைக்க முயற்சி.. முறியடித்த உளவுத்துறை...

விஜய் மீது கோபத்தில் பாஜக தலைமை!.. லிஸ்ட் ரெடி!.. விரைவில் அமலாக்கத்துறை ரெய்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments