நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

புதன், 6 ஜூன் 2018 (15:48 IST)
நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அப்பள வியாபாரியான ஆரோக்கியசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்தார்.

அவருடன் 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரது நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்னர். நண்பர்களை பிரிந்த ஸ்டீபன்ராஜ் சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஸ்டீபன்ராஜின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

எல்லாம் காட்டு

மருந்துகளில் QR Code!.. போலிகளை தடுக்க மத்திய அரசு அதிரடி!...

மராத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்!.. ட்ரோலில் சிக்கிய ஆதவ் அர்ஜுனா...

எலான் மஸ்க்குக்கு அடுத்து இவர்தான்!. அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்!...

வெனிசுலா சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14000 கிமீ தள்ளி இருக்கும் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்..

மராத்தான் ஓட்டத்தில் முதல்வர்... 30 நிமிடங்கள் அசராமல் ஓடி அசத்திய விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments