சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (15:24 IST)

விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம்

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கௌதம். இதையடுத்து விக்ரமை வைத்து படம் இயக்க அவர் முயற்சித்து வருகிறார்.

 
அடுத்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கௌதமே கூறியுள்ளார்.
 
இருமுகனுக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விக்ரம். அதையடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2. இந்தப் படங்களுடன் கௌதம் படத்துக்கும் அவர் கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.