சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (08:59 IST)

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆட இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா ஏன் பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் என கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்திய வீரர்கள் ஒரு மாதத்துக்கு மேல் ஓய்வில் இருந்து திரும்பியுள்ளதால் அவர்களுக்கு தேவையான பயிற்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்யும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.