புதன், 25 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (09:03 IST)

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில்  அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
 
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்......
 
தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு :
 
நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி,
 
திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்
 
1, பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும். 
அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
 
2, தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.
 
3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது
 
அரசாங்கத்திற்கு வைத்த கோரிக்கைகள்......
 
1, திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.
 
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு:         ரூ.250 வரையும்
A/C திரையரங்குகளுக்கு:                                    ரூ.200 வரையும்
NON A/C திரையரங்குகளுக்கு:                          ரூ. 150 வரையும்
என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
 
2, நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. 
அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
 
3, Operator License க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். 
அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை.ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் 
Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
4,  MALL ளில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity க்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity க்கு  அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
5, மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் 
MSME இன் கீழ் வருவதால் MSME விதிபடி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.
 
மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள்
 நஷடமின்றி நடத்த முடியும்.
நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 
 
இவ்வாறு.... தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் R.பன்னீர்செல்வம் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.