வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:05 IST)

தங்கலான் வெற்றியை அடுத்து சூர்யாவோடு இணைகிறாரா பா ரஞ்சித்?

பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகி படம் வசூலில் கலக்கியது.

படம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொடும் என சொல்லப்படுகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “அடுத்து ஒரு பெரிய ஹீரோவை நான் கொண்டு வர்றேன். கமர்ஷியலா படம் பண்ணுவோம்” என ரஞ்சித்திடம் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் இப்போது பா ரஞ்சித் மற்றும் சூர்யா இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா கார்த்திக் சுப்பராஜ் மற்றும் வாடிவாசலை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.