1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:54 IST)

துணை நடிகரை தாக்கிய வழக்கு : நடிகர் விஜய் சேதுபதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

sethupathi
துணை நடிகரை தாக்கிய வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி விட்டன 
 
நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென துணை நடிகர் மகா காந்தி என்பவர் தாக்கியதாகவும் அதனை அடுத்து விஜய் சேதுபதியும் அவரை தாக்கியதாக கூறப்பட்டது 
 
இது குறித்து மகாத்மா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மனு தாக்கல் செய்தார் 
 
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகை விஜய் சேதுபதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது