சுவையான பீட்ருட் அல்வா செய்ய..!!

தேவையான பொருட்கள்:
 
பீட்ருட் - 1/2 கிலோ
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
நெய் - 200 கிராம்
பசும்பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
கிஸ்மாஸ் பழம் - 50 கிராம்

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.
 
பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில்  சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
 
அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி  விடவேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
 
அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து,  அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

எல்லாம் காட்டு

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

அடுத்த கட்டுரையில்
Show comments