சுவையான பால் பாயாசம் செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:40 IST)
ஜவ்வரிசி - 100 கிராம் 
ஏலக்காய் - 5
சேமியா - 100 கிராம் 
சக்கரை - 100 கிராம் 
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
நறுக்கிய பாதம் - 5

செய்முறை:
 
முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து கொதிக்கவைத்து பால் கொதித்த உடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வேகவைக்கவும் ஜவ்வரிசி நன்கு வெந்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வேகவைக்கவும்.
 
ஜவ்வரிசி வெந்த பிறகு 5 ஏலக்காயை தட்டி சேர்க்கவும். அடுத்ததாக 100 கிராம் சேமியா சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். சேமியா வெந்த பிறகு 100 கிராம் சக்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
 
அடுத்ததாக ஒரு தாளிப்பு கரண்டியில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 10 திராட்சை மற்றும் 5 நறுக்கிய பாதம் சேர்த்து பொன்னிறமாக வரும்போது பாயாசத்தில் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அவ்வளவுதான் அருமையான மற்றும் சுவையான பால் பாயாசம் தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments