இரண்டாவது கோடு: உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜூர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு: மகாரம், ஆஹவனியம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம் மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர். விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும்.
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும். ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம். நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை. மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் ஏற்படும்.
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.