Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 3 ஜனவரி 2020 (11:50 IST)
 
விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள்  ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில்  ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.
 
சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி - கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி - சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி - ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த  புண்ணியம் உண்டாகும். ஆவணி - மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.
 
புரட்டாசி - நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி - சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை - மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை - பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி - சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி - தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில்  பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments