அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியவர்.
சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர். தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். காவிரியை அடக்கி கமலண்டத்தில் நிறுத்தியவர். ஆறுமுகக் கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர்.
ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியர். விந்தியமலையை அடக்கியவர். வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர். அகத்தியர் இயற்றிய ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது.