Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தபின் மறுபிறப்பு உண்டா?; சித்தர்கள் கூறுபவை.....!

Updated: சனி, 12 மே 2018 (12:25 IST)
 
இறந்தவர் என்ன ஆவார்கள் ?
 
உடல் உயிரை ஏற்கும் நிலை இல்லை என்றாலும், உயிரை உடலுடன் இணைக்கும் சக்தி குறைவுபட்டாலும். அல்லது பிரபஞ்ச உயிர் சக்தி  கிடைக்காவிட்டாலும், உடலியக்கம் நின்றுவிடும். இதுவே மரணம். மரணத்தின் முடிவில் உயிர்சக்தி நாத விந்தாக பிரபஞ்சம் சேரும். உடல் என்ற சடம்  பஞ்சபூதமாகப் பிரிந்து அகார உகாரமாக பிரபஞ்சத்தில் சேரும். மீண்டும் இவை நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு எடுக்கும். இது உயிரின் சுழற்சி.
 
இந்தச் சுழற்சியை சித்தர்கள் பலபிறவிபெற்று மனிதப்பிறவி அடைந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பிறவிச் சுழற்சியை நிறுத்தி, மரணம் அடையாமல் இருப்பது மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அல்லது கூடு உடையா நிலை அல்லது காயசித்தி என்று சித்தர்கள் சொல்லுவார்கள்.
 
இருந்திடும் தேகமெல்லாம் இறந்தபின் சிவமே ஆச்சு.
திருந்திட நந்தி திரும்பியும் பிறப்பாணப்பா 
பொருந்திடும் ஞானம் இன்றி போனவர் பிறப்பரேன்பார்
வருந்திடும் அறிவின்விதை மாயத்தை கானர் தானே 
இறந்தபின் உயிர்கள் சிவன் என்ற இயற்கை என்ற பிரபஞ்சத்தைச் சேரும். மீண்டும் பிரபஞ்சம் என்ற நந்தி உயிர்களை உருவாக்கும். இது அறிவால் அறிந்த வித்தை. இந்த உண்மை ஞானம் இல்லாதவர் செத்தவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments