குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசை - காங்கிரஸ் அதிருப்தி

வெள்ளி, 26 ஜனவரி 2018 (08:10 IST)
டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

 
மத்திய அரசின் சார்பில் நடைபெறும் விழாக்களில் எப்போது எதிர்கட்சி தலைவர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கபடுவது வழக்கம்.  
 
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் 69வது குடியரசு தினம் கொண்டாப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால், அவருக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை அவமானப்படுத்தும் நோக்கத்திலேயே பாஜக இப்படி செயல்பட்டுள்ளது என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், குடியரசு விழாவில் ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால், அவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments