1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (15:18 IST)

ஃபேஸ்புக்கில் மாணவி புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டிய வாலிபர்

திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் மாணவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டிய வாலிபரை காவல் துறையினர் வலை விரித்து தேடி வருகின்றனர்.


 

 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுஷ்மிதா என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருவிழாவிற்காக பக்கத்து ஊரில் உள்ள அவரது உறவினர் ராஜ் என்பவர் வீட்டிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். 
 
அங்கு ராஜ் சுஷ்மிதாவுடன் இணைந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போதே சுஷ்மிதாவின் பொற்றோர் அதை கண்டித்துள்ளனர். பின்னர் ராஜ், சுஷ்மிதாவை தனக்கு திருமணம் செய்து தருமாறு சுஷ்மிதாவின் பொற்றோரிடம் கேட்டுள்ளார்.
 
அதற்கு சுஷ்மிதாவின் பொற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர் அதில் ஆத்திரமடைந்த ராஜ் சுஷ்மிதாவை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் சுஷ்மிதாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் தவறான நோக்கில் ராஜ் வெளியிட்டுள்ளார். 
 
அதனால் சுஷ்மிதாவின் பொற்றோர், அருப்புக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் ராஜ் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.