கடன் கட்டாததால் கைது! பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி! – தஞ்சாவூரில் பரபரப்பு!

திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:19 IST)
தஞ்சாவூரில் வாகன லோன் வாங்கி கட்டாத நபரை கைது செய்ததால், அவர் பேஸ்புக் லைவில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வளவன்புரத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் சில மாதங்களுக்கு முன்பு வாகன லோன் எடுத்து கார் மற்றும் பைக் வாங்கியுள்ளார். கொரோனா காரணமாக தவணை கட்ட முடியாத சூழலில் இருந்த நிலையில், தவணை கட்டாததற்காக கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் நீதிமன்ற உத்தரவை பெற்று பிரவீனை கைது செய்ய காவல் நிலையத்தை அணுகியதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியசாமி கடன் வாங்கிய பிரவீனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளார். மேலும் கார் லோன் பிரவீனின் தாயார் பெயரில் இருந்ததால் அவரையும் கைது செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரவீன் காவல் நிலையத்திலேயே பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு பேஸ்புக்கில் லைவ் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...

இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

அடுத்த கட்டுரையில்
Show comments