4 விடைகளும் தவறானவை: குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்

ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (22:30 IST)
தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் இன்று நடத்திய குருப் 4 தேர்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ் எழுதினர். வெறும் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்காக இந்த தேர்வு இன்று தமிழகம்  முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தேர்வில் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கான 4 விடைகளில் ஒன்று கூட சரியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாகூர் பிறந்தது 1861-ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதியாகும். ஆனால் தேர்வுத்தாளில் கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளிலும் இந்த சரியான பதில் இடம்பெறவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வானையம் விளக்கமளித்தபோது, 'குரூப் 4 தேர்வு விடைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம் என்றும், உத்தேச விடை வெளியான பிறகு 7 நாட்களுக்குள் அதில் தவறேதும் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

அடங்காத இஸ்ரேல்!.. ஹார்மூஸை மூடிய ஈரான்!.. டிரம்ப் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சே!...

காட்டிலேயே பல வருடங்கள் வளர்ந்த மோக்லி சிறுமி!.. 18 வயதில் மரணம்!..

இந்தியாகிட்ட அமெரிக்கா கத்துக்கணும்!.. மும்பை மெட்ரோவை புகழ்ந்து தள்ளிய இளம்பெண்!...

Zomato டெலிவரி வேலை!. மாசம் ஒரு லட்சம் வருமானம்!.. மும்பையை கலக்கும் நபர்!...

மாதவிடாய்!.. மாணவியை வெயிலில் நிற்கவைத்த ஆசிரியர்!.. நடவடிக்கை பாயுமா?!..

அடுத்த கட்டுரையில்
Show comments