செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:53 IST)

பிரதமர் துவங்கி வைக்கும் ரயிலை இயக்கும் பெண்! – சுவாரஸ்யமான தகவல்!

தமிழகம் வந்துள்ள பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிலையில் அவர் தொடங்கி வைக்கும் மெட்ரோ ரயிலை பெண் ஒருவர் இயக்க உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக பயணித்த பிரதமர் மோடி தற்போது அடையாறில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் நிலையில் கார் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் தொடங்கி வைக்கும் மெட்ரோ ரயில் சேவையில் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயிலை ரீனா ஆறுமுகம் என்ற பெண் இயக்க உள்ளார்.