மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

சனி, 21 அக்டோபர் 2017 (09:55 IST)
பிரதர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை.
 
திமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் 40 பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்” என அவர் பேசினார்.
 
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாம் காட்டு

விஜயை புகழ்ந்து பேசிய அமமுக எம்.ஏல்.ஏ காமராஜ் நீக்கம்!.. டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!...

என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்தது!.. திருமாவளவன் உண்மையை சொல்லிட்டாரே!..

பொதுமக்களுக்கு இடையூறு செய்தால்? தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை...

நீட் மறுதேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டுமா? தேசிய தேர்வு முகமை சொல்வது என்ன?

விஜயின் ஜோசியருக்கு அரசுப்பதவி!. இட்ஸ் ராங்க் புரோ!.. கலாய்க்கும் ரசிகர்கள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments