Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

Written By Murugan
Updated: சனி, 21 அக்டோபர் 2017 (09:56 IST)
பிரதர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை.
 
திமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் 40 பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்” என அவர் பேசினார்.
 
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாம் காட்டு

விஜய்யால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு கமல் ஆதரவு.. இது தொடர வேண்டும் என விருப்பம்..

15 நிமிடம் சீக்கிரமா வீட்டுக்கு போனதற்கு விசாரணையா? கார்ப்பரேட் கம்பெனி ஊழியர் அதிருப்தி..

அதானி வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்.. உண்மை ஒருநாள் வெல்லும் என அதானி பதிவு..

5 நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு 2 மகள்களை கொலை செய்த தந்தை.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்...

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

அடுத்த கட்டுரையில்
Show comments