வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

Written By Mahendran
Updated: சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:24 IST)
வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பயணிகள் பெறும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  
 
ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து  ஆந்திராவின் ஒரு சில பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இதனை அடுத்து அவர்கள்  ரயிலில் செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  திடீரென பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
 

Edited by Mahendran

எல்லாம் காட்டு

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments