Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது யு.பி.எஸ்.சி தேர்வின் இறுதி முடிவுகள்: தமிழகத்தை சேர்ந்தவர் சாதனை..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 23 மே 2023 (14:59 IST)
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த கோவில்பட்டி மாணவர் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளன 
 
2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ் இறுதி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 
யுபிஎஸ்சி இறுதி தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளதாகவும்  இஷிதா கிஷோர் முதலிடத்தையும்  கரிமா லோஹியா 2வது முதலிடத்தையும்  உமா ஹராதி 3-வது முதலிடத்தையும்  பிடித்தனர்.
 
யூபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி என்பவர் அகில இந்திய அளவில் 117 வது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளார். அதேபோல்  புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன், 147-வது இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த மதிவதனி இராவணன் 447-வது இடம் பிடித்து யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
நாடு முழுவதும் யூபிஎஸ்சி இறுதி தேர்வில் 933 மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் முதல் நான்கு இடங்களில் பெண்கள் தான் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அமெரிக்கா வரி போட்டா நாங்களும் வரி போடுவோம்!.. கனடா பிரதமர் அதிரடி!...

நாங்களா? அவங்களா?.. முடிவு பண்ணுங்க!.. முதல்வருக்கு சி.பி.எம் சண்முகம் கேள்வி!..

சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார் விஜய்!.. ஸ்டாலின் தாக்கு!...

மாமா.. மச்சான்!. நல்லவேளையா நானும், ஸ்டாலினும் அங்க இல்ல.. துரைமுருகன் புலம்பல்...

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments