Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் அதிகார அத்துமீறல்கள்? டிடிவி தினகரன் கேள்வி

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (17:24 IST)
அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என டிடிவி தினகரன் கேள்வி. 

 
முன்னதாக அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 600-க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டுள்ளது போலும்.
 
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அம்மா உணவகத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது சரியானதல்ல. 
 
‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறிய பிறகும் இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடைபெறுவதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

எல்லாம் காட்டு

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments