மழை நீரை வெளியேற்றும் பணி: தி.நகரில் போக்குவரத்து மாற்றம்!

திங்கள், 22 நவம்பர் 2021 (12:04 IST)
தி.நகர் சாலைகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் காலை சிறிது நேரம் பெய்த மழைக்கு தி.நகர் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இருப்பினும் பணிக்கு செல்லுபவர்கள் வடியாத தண்ணீரில் நடந்து வேலைக்கு செல்கின்றனர். அங்கு பசுல்லா சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணி நடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

126 தொகுதிகளில் தவெகவுக்கு போட்டதும் கொத்து பரோட்டாதானே... புளூசட்டமாறன் விளாசல்!..

விஜயின் முதுகுதான் கரூர் நினைவுச் சின்னம்!. கலாய்க்கும் திமுக!...

7 வருடங்களாக கோமாவில் கணவர்!.. காலை கடித்து சரி பண்ணிய மனைவி!..

இப்ப போலீஸ் உங்க கையில்தான இருக்கு.. கண்டுபிடிங்க!.. விஜயை விளாசும் அமீர்!...

கரூரில் விஜய் பிரச்சாரம்!.. இடைத்தேர்தலுக்கு தடை விதித்த நீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments