Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முடிவடைந்தது பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி எப்போது?

Written By Mahendran
Updated: திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:19 IST)
கடந்த சில நாட்களாக பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்றுடன் பிளஸ்டூ பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது
 
தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பிளஸ் டூ தேர்வு எழுதி உள்ளனர் என்பதும் இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மாணவ மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிளஸ் டூ பொது தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் பத்தாம் தேதி தொடங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 
பிளஸ் டூ பொது தேர்வு முடிவுகள் அநேகமாக அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் உள்பட ஒரு சில மொழிப் பாடங்களை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதாமல் இருந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

கச்சா எண்ணெய் ஒரு சொட்டு கூட கிடைக்காது!.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!...

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments