மண்டல போக்குவரத்து முறை ரத்து; மாவட்ட அளவில் முடக்கம்!? – முக்கிய முடிவுகள் குறித்த தகவல்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 24 ஜூன் 2020 (14:43 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் தேனி, மதுரை ஆகிய பகுதிகளிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.  தற்போது கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தமிழக மாவட்டங்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்குள் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் மண்டல முறையை ரத்து செய்து மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்கவும், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை மாவட்ட எல்லைகளை மூடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments