இந்த மூன்று மாவட்டங்களில்தான் இப்போது கொரோனா அதிகம் – கவலையளிக்கும் புள்ளிவிவரம்!

புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:43 IST)
தமிழகத்தில் சென்னை தவிர்த்து சேலம், கோவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

தமிழகத்தில் தினசரி தோராயமாக 6000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஆரம்பம் முதலே சென்னை முதல் இடத்தில் இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் இருந்து சேலம், கோவை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்து இப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் இம்மாதம் ஒன்றாம் தேதி இருந்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கையில் இப்போது கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு இந்த மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
 

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments