மாணவனை வகுப்பறையில் சிறை வைத்த ஆசிரியர்!

Updated: வியாழன், 15 மார்ச் 2018 (16:05 IST)
பள்ளியில் தூங்கி கொண்டிருந்த மாணவனை கவனிக்காமல் ஆசியர் வகுப்பறையில் பூட்டி சென்ற சமபவம் ஒன்று புதுவையில் அரங்கேறியுள்ளது.
 
புதுவை மாநிலத்தில் உள்ள திருக்கனுரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேல்முருகன் என்ற மாணவன் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளான். ஆனால், மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை.
 
இதனால் அந்த மாணவனின் பெற்றோர் பதட்டம் அடைந்துள்ளனர். அப்போது பள்ளியில் சுமார் மாலை 5.00 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு பள்ளியில் அருகில் உள்ளவர்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் பள்ளியில் இருக்கும் பூட்டை உடைத்து வகுப்பறையில் இருந்த மாணவனை மீட்டு அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
 

எல்லாம் காட்டு

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

என் குழந்தையாக இருந்தால்!. டெல்லி நீட் தேர்வுக்கு அபிராமி ஆதரவு!..

ரயில் கட்டணங்களில் 3% தள்ளுபடி.. ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு.. யார் யார்க்கு பொருந்தும்?

அடுத்த கட்டுரையில்
Show comments