கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தமிழக நூலகங்கள்! – பொதுநூலக இயக்குனரகம் அனுமதி!

Written By Prasanth Karthick
Updated: சனி, 24 ஜூலை 2021 (10:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்களை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி 15 வயதிற்குட்பட்டோர், 60 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள் நூலகம் செல்ல அனுமதி கிடையாது. நூலகம் செல்பவர்கள் புத்தக அடுக்குகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என கட்டுப்பாடுகளுடன் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எல்லாம் காட்டு

தம்பி நீ ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருப்ப!.. லயோலா மணிக்கு நக்கலா பதில் சொன்ன அமீர்!...

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுக்கு வீட்டுக்காவல்!.. காவல்துறை அதிரடி..

நாளை வரை கெடு கொடுத்த கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை கிடையாது.. தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..

ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு.. நீதிமன்றம் உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments