நாள் முழுவதும் வீடியோகேம்… பெற்றோர் கண்டித்ததால் மாணவி எடுத்த் அதிர்ச்சி முடிவு!

வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (09:58 IST)
சென்னையில் வீடியோகேம் விளையாடுவது குறித்து பெற்றோர் எச்சரித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் பத்மாவதி. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி காம் படித்து வந்துள்ளார். இவர் செல்போனில் எப்போதும் வீடியோ கேம் போன்றவற்றை விளையாடுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார்.

இதனால் மாணவியின் பெற்றொர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி கொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியாகி அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அதற்குள்ளாகவே பத்மாவதியின் உயிர் பலியாகி விட்டது. இந்த தற்கொலை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments