வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (18:32 IST)

தமிழ்நாட்டில் இன்று 5,560 பேருக்கு கொரோனா உறுதி… ஒரே நாளில் 59 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 5,560  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,25,420   ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,524  ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,70,192  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 59  பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,618 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 84,524 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 62, 17,923  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 992 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.