சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் குறித்த புதிய தகவல்

திங்கள், 7 செப்டம்பர் 2020 (18:25 IST)
சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் குறித்த புதிய தகவல்
சென்னையில் இருந்து செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. குறிப்பாக விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர்
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் ஓடவில்லை. இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன. பயணிகள் மத்தியில் ரயில் பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தற்போது சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பொது மக்களும் சென்னையிலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பொது மக்களும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது 

எல்லாம் காட்டு

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

2031-ம் ஆண்டு அண்ணாமலை தான் முதல்வர்.. மாநாட்டில் பங்கேற்க வந்த பெண் பேட்டி..

ஓடவில்லை.. ஒளியவில்லை!.. நான் திமுக காரன்!.. எ.வ.வேலு பேட்டி....

விஜய்க்கு போட்டியாக சூர்யா வந்துவிடுவாரோ என்ற பயமா? சூர்யா பேனரை அகற்றிய போலீஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments