Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மன்னிப்பு கோரிய சித்தார்த்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 5 பிப்ரவரி 2022 (12:32 IST)
சென்னை காவல்துறையினரின் விசாரணையின் போது நடிகர் சித்தார்த் மீண்டும் மன்னிப்பு தெரிவித்தார். 
 
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த நடிகர் சித்தார்த் அவரிடம் மன்னிப்பு கேட்டார். சித்தார்த் தான் டுவீட்டில் பதிவு செய்தது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். 
 
மேலும் அப்போது நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணைய  நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். 
 
இந்நிலையில் சென்னை காவல்துறையினரின் விசாரணையின்போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு தெரிவித்தார். சர்ச்சை கருத்துக்கு எதிராக எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியிருந்தார். நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை மகளிர் தேசிய ஆணையத்திற்கு சென்னை காவல்துறை அனுப்பி வைத்தது.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments