செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தால் அண்ணாமலைக்கு சவாலாக இருக்குமா?

Written By Mahendran
Updated: சனி, 23 மார்ச் 2024 (11:41 IST)
கோவை தொகுதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தால் அவரது வெற்றி சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சில மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவரது ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் 280 நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார் என்றும் தினமும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்றும் மனுதாரருக்கு எதிரான எந்த விதமான உண்மையான ஆதாரங்களும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் கோவை சென்று அண்ணாமலையை தோற்கடிக்கும் வகையில் தீவிரமாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

இதனால் அண்ணாமலை வெற்றி சவால் ஆகிவிடும் என்று கூறப்பட்டாலும் செந்தில் பாலாஜி அதற்கு முன் ஜாமீனில் வெளி வருவாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. ஒரு வாரம் கெடு, இல்லையேல் சிபிஐ தான்: நீதிமன்றம்

கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்.. மேகதாது அணை விவகாரமாக முக்கிய ஆலோசனை...

பிரிஞ்சி வாழ முடியாது!.. ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்!..

விஜய் ஆட்சியில் மேலும் 2 எலக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங் கிளஸ்டர்கள்.. மத்திய அரசு ஒப்புதல்..

வீசும் காற்றில் விஷம் பரவட்டும் தோழர்!.. பா.ரஞ்சித்துக்கு மோகன்.ஜி பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments